இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் வேடிக்கையாகவும் சில வீடியோக்கள் அச்சுறுத்தும் வகையிலும் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது பாம்பு ஒன்று தலை துண்டிக்கப்பட்டும் தன்னைத்தானே கடித்துக்கொண்டு தாக்கும் ஒரு வீடியோ வைரலாகி பகீர் கிளப்பியுள்ளது. பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால் மனிதர்கள் அருகே செல்வதற்கு அச்சம் கொள்வார்கள்.

ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போலவே அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தை வெளிப்படுத்தும். மனிதர்களின் உயிரை பறிப்பதில் அதிகம் விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில நேரங்களில் தன்னைத் தானே தாக்கிக் கொள்ளும். தற்போது இந்த வீடியோவில் பாம்பு ஒன்று தனது தலை துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது. அப்போது வெட்டி துண்டாக கிடந்த தலையே குறித்த பாம்பை கடித்து பலி வாங்கியுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.