வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் நேற்று நள்ளிரவில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தாயம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நண்பர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சக நண்பரான முனிசாமி என்பவர் மதனின் மூக்கை கடித்துள்ளார்.

இதனால் பாதி மூக்குடைந்துள்ள நிலையில் படுகாயமடைந்த மதன், மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனிசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுபோதை தலைக்கேறி செய்வது அறியாமல் இப்படி நண்பனையே பதம் பார்த்த இளைஞர் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.