கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை தற்போது வாபஸ் பெற்று வரும் நிலையில் இதுபோன்று மாற்றுவது சட்ட விரோதமாகும். இந்த நிலையில் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் நம்பருக்கு போன் செய்தால் ஒரு 2000 ரூபாய் நோட்டுக்கு ஒரு 500 ரூபாய் நோட்டு தருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.