கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடியில் 25க்கும் அதிகமான குழந்தைகள் பயின்று வருகின்றனர். மதிய உணவு குழந்தைகளுக்கு சமைத்து வழங்கப்படுகிறது.

சில குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்களே உணவு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில் மதிய உணவு சாப்பிட்ட 12 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தைகள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.