கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெதுகும்மல் பகுதியில் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். நேற்று முன்தினம் செல்வனின் உறவினர் இறந்ததால் அவரது உடலை அடக்கம் செய்வது தொடர்பான சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குடிபோதையில் வந்த மூன்று பேர் தகராறு செய்தனர்.

இதனை செல்வன் தட்டி கேட்டதால் அவர்கள் செல்வனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த செல்வனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தர்மராஜ், சுரேஷ், சதீஷ் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.