புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது புதுச்சேரி வில்லியனூர் காஞ்சி தெருவில் வசிக்கும் ஹேமமாலினி என்பவர் புதுக்கோட்டையில் தங்கி இருக்கிறார்.

அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஞானசேகரனிடம் இருந்து பல லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி அந்த பெண் ஞான சேகரனை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டார். இதேபோல சம்பந்தப்பட்ட பெண் பல ஆண்களிடம் பழகி ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என ஞானசேகரன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.