தமிழகத்தில் புதிதாக வாக்காளர் அட்டை பெறுபவர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வரைவு வாக்காளர் பட்டியலை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் நிலையில் இதனை தொடர்ந்து நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 27 முதல் டிசம்பர் ஒன்பதாம் தேதி வரை கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம், நவம்பர் 4, 5, 18, 19, ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் இறுதி பட்டியல் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களின் மூலமாக புதிய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள் பணிகளை முடித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது