அக்டோபர் 28ஆம் தேதி இரவு சந்திர கிரகணம் நடைபெற இருக்கிறது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திர கிரகணம் காரணமாக பல கோயில்களின் நடை சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சமயபுரம் மாரியம்மன் கோயிலின் நடை 28ஆம் தேதி மாலை 6 மணி முதல் 29ஆம் தேதி காலை 5.30 வரை அடைக்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் சந்திர கிரகணம் இரவு 1.05 மணி முதல் 2.24 மணி வரை நடைபெறவுள்ளது. சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி கோயில் 8 மணி நேரத்திற்கு நடை மூடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.