மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்கள் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டு உள்ளார். மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையொட்டி மூன்று நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று , 29, மற்றும் 30 ஆகிய தேதிகளில் மதுரையில் அனைத்து விதமான மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தரவுகளை மீறுவோரை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெற கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.