தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு ஊழியர்கள் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என காத்திருந்தனர். தற்போது அது குறித்து அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியேற்றுள்ள நிலையில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.