தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போல் இணையதளம் மூலமாக மிகக் குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக மோசடியை நடைபெறுவதாகவும் இது குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுடன் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். குறைந்த விலையில் கிடைக்கும் பட்டாசுகள் தொடர்பாக சமூக வலைத்தள விளம்பரங்களை மக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.