தமிழகத்தில் மகளிருக்கு 1000 வழங்கும் திட்ட பணிகளானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளில் இரண்டாம் கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் தகுதி பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டது. செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் அதிகாரிகள் கள ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, இன்னும் 7 நாட்களில் அனைவருக்கும் மகளிர் உரிமைதொகை வீடு தேடி வந்து சேரும் என்று குறிப்பிட்டுள்ளார்.