தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை வரும் 13ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 13ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். எம்எல்ஏ திருமகன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி நாளை அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாளை அவை ஒத்தி வைக்கப்படுவதால்  நாளை சட்டப்பேரவை தொடர் நடைபெறாது.