தமிழகம் முழுவதும் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி மிலாடி நபி மற்றும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது .

இதனால் இந்த இரண்டு நாட்களிலும் மதுபானம் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.