தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அடிக்கடி ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக சில பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது கூட்டுறவு பண்டகச் சாலைகள் மூலமாக கிட்டத்தட்ட 1254 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்ற வருகின்றது.

இந்த வருமானத்தை பெருக்குவதற்காகவும் பொது மக்களின் வசதிக்காகவும் ஆவின் பொருள்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதற்கான இந்த திட்டம் வருகின்றமே பத்தாம் தேதியிலிருந்து அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் பொதுமக்கள் ரேஷன் கடைகள் மூலமாக யுபிஐ சேவைகளை பயன்படுத்தி எளிமையான முறையில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.