தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நாளை முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில்  மகேஷ் ஆய்வு செய்த நிலையில் அதன் பிறகு பேசிய அவர், தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால் சுகாதார நடவடிக்கைகள் எடுக்கவும், குடிநீர் மற்றும் கழிவறைகள் வசதிகளை மாணவர்களுக்கு உறுதி செய்யவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக சேதமடைந்த கட்டிடங்களில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.