தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது. அதனைப் போலவே பொங்கலுக்கு முன்பே மகளின் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்தும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால் பொங்கலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய், மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் என வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிகிறது. இந்த தகவல் தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.