மகாராஷ்டிராவில் ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அதில் சிக்கி ஒரு முதியவர் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஒரு தைரியமிக்க இளைஞர், அந்த முதியவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஆற்றில் குதித்துள்ளார்.

ஆனால், ஆற்றின் நீரோட்டம் மிகக் கடுமையாக இருந்ததால், அந்த இளைஞரும் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இருவரும் தண்ணீரில் மூழ்கும் நிலைக்குச் சென்றதால், கரையில் நின்று கொண்டிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்து, என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றமடைந்தனர். இந்த திக் திக் நிமிடங்கள் அங்கிருந்தவர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்தது.

இருப்பினும், அந்த இளைஞர் தனது தைரியத்தை கைவிடாமல், தண்ணீருடன் போராடி எப்படியோ முதியவரைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டார். கரையில் இருந்த மக்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவர்கள் இருவரையும் நோக்கி கயிறு மற்றும் நீண்ட கம்புகளை வீசி எறிந்தனர். அதிர்ஷ்டவசமாக, அந்த இளைஞர் கயிற்றை இறுக்கமாகப் பற்றிக் கொள்ள, கரையில் இருந்தவர்கள் அவர்களைப் பாதுகாப்பாக மேலே இழுத்து மீட்டனர்.

இந்நிலையில்

“>

நூலிழையில் உயிர் தப்பிய இந்த இருவரின் விறுவிறுப்பான மற்றும் நெஞ்சை உலுக்கும் மீட்பு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆபத்தான சூழலிலும் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் முதியவரைக் காப்பாற்றிய அந்த இளைஞரின் வீரத்தை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.