தமிழகம் முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கியுள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் இருப்போர் இந்த முகாமுக்குச் சென்று பயன் பெறலாம். மருத்துவர்கள் அணுகாமல் வீட்டிலேயே மருந்து உட்கொள்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு தனி வார்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.