சென்னை பல்லாவரம் அருகே அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி மோதியதில் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். திரிசூலம் சிக்னலில் இருந்து புறப்பட்டபோது ஓட்டுநர் காரை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகின்றது.

இதனால் அசுர வேகத்தில் ஓடிய கார் சென்னை விமான நிலையம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி பிறகு பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் கார் பாய்ந்த நிலையில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் உட்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.