தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு வாரமாக காலாண்டு தேர்வுகள் நடந்த நிலையில் செப்டம்பர் 27 உடன் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் அக்டோபர் ஒன்பதாம் தேதி திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் விடுமுறை தொடங்குவதால் மாணவர்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.