தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 13ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 26 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இந்த மாதம் செய்முறை தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நாளை மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது.

பொதுத்தேர்வுக்கு கூடுதல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான உச்சக்கட்ட பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டுள்ளது. தேர்வை கண்காணிக்க மாவட்ட அளவில் கல்வித்துறையில் இருந்து சிறப்பு கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.