தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் சென்னையைப் பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.