நாட்டின் தற்போதைய பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களை நிர்வாணமாக சித்தரித்து அவற்றை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் சைபர் குற்றங்களை தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். பெண்கள் 1930 என்ற கட்டணமில்லா எண்ணை  தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அவருடைய பெயர் தெரிய வராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.