தமிழகத்தில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று அமைச்சர் கே என் நேரு உறுதியளித்துள்ளார். அதிலும் குறிப்பாக கோடை காலங்களில் தொடர்ந்து சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக பல புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் அமைச்சர் கூறியுள்ளார். கோவையில் சிறுவாணி அணையில் மழை பெய்யாத காரணத்தினால் தண்ணீர் இல்லை. மேலும் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவதற்கான ஆய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. அதற்கான குழு விரைவில் வர உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.