தமிழகத்தில் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதை தவிர மாவட்டங்களுக்கான சிறப்பு நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்படும்.

அதன்படி இன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி  ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழாவுக்கு விடுமுறை விடப்படுவதாகவும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வேலை நாளாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர திருப்பூர், ஈரோடு, திருச்சி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.