சென்னை கொளத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட டீக்கடை சார்பாக ஒரு டீ வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டீ வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர். 12 ரூபாய்க்கு விற்கப்படும் டீக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் இந்த சலுகை இன்று முதல் மூன்று நாட்கள் அதாவது இன்று முதல் நாளை மறுநாள் மாலை 4 மணி வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சமீப நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தை அடைந்துள்ள நிலையில் இந்த  சலுகை மக்களை கடை முன் கூட வைத்து விட்டது.