சென்னையில் ஃபார்முலா 1 கார் பந்தயத்தை விரைவில் நடத்தப்பட உள்ளதாக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, 16 ஆண்டுகள் கழித்து சென்னையில் நடக்க இருக்கும் ஆசிய ஹாக்கிப்போட்டியை கண்டு களிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அணி வீரர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஃபார்முலா 1 கார் பந்தயம் விரைவில் சென்னையில் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.