தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு பொது தேர்வு வெளியிடப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்காக ஜூன் மாதத்தில் துணைத் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. எனவே மாணவர்கள் மே 23 அதாவது நாளை முதல் மே 27ஆம் தேதி வரை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.