தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வி ஐ டி பல்கலைக்கழகர் வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர்கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான உதவித்தொகையை பெற 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறக்கட்டளை சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி தொகை காண விண்ணப்பத்தை மாணவர்கள் காட்பாடி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் மே 22ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் உரிய ஆவணங்களை இணைத்து மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த ஒரு வார காலத்திற்குள் 215 டாக்டர் எம்ஜிஆர் பிளாக், வி ஐ டி வளாகம், வேலூர் 632014 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.