தமிழகத்தில் கடந்த மே 15ஆம் தேதி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் மே 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மே 6ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மே 15 ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும். இதற்கு ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று  நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலந்தாய்வு ஒத்திவைப்புக்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முடிவு பெற்றுள்ளது.