தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே எட்டாம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் www.tngasa.in ஏன்டா இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் மே 19ஆம் தேதி உடன் முடிவடைந்த நிலையில் மே 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

இந்நிலையில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். விண்ணப்ப பதிவு முடிவடைந்தது மாணவர்களின் தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிக்கு வருகின்ற 23ஆம் தேதி அனுப்பி வைக்கப்படும் எனவும் அதனை தொடர்ந்து 25-ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.