தமிழகத்தில் சர்வதேச கருத்தரங்குகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த விதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் சமூகநீதி பேரவை தலைவர் பாலு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மே 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

திருமண மண்டபங்களிலும் விளையாட்டு அரங்கங்களிலும் மது விற்பனை செய்யப்படும் என அரசு முன்பு அறிவித்திருந்தது. மதுபானம் வழங்கும் முடிவை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.