தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் மண்ணெண்ணெய் பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாட்டின் மொத்த தேவையில் 7% மட்டுமே மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் அளவுக்கு குறித்து விளம்பரப்படுத்தும்படி திருவாரூர் மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.