விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அளித்த அனுமதிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவர் கே பாலு தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன் கலைமதி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். சர்வதேச கருத்தரங்குகள் விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற வழி செய்யும் திருத்தத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மது பரிமாற அனுமதி தந்தால் மக்கள் பாதிப்படைவர் என மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுபான விதிகளுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது