தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக பரவலாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.