தமிழகத்தில் கலைஞர்  மகளிர் உரிமைதொகை திட்டத்தில் பணம் வராதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் விண்ணப்பிக்கும் பொழுது  களஆய்வு  என்று காட்டுவதால் அவர்களால் மேல்முறையீடு செய்ய முடிவதில்லை. அதனால் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது உரிமை தொகை பெறாத மக்கள் விண்ணப்பத்தை நிலை குறித்து அறிவதற்கு இணையத்தில் ஆதாரங்கள் உள்ளீடு செய்தால் பரிசீலனையில் உள்ளது விண்ணப்பம் கள ஆய்வுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று வருகிறது.

இதனால் இணையத்தில் மேல்முறையீடு செய்ய முடியவில்லை. தற்போது மேல்முறையீடு செய்ய 12 நாட்கள் மட்டுமே இருப்பதால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள். இதனால் இணையத்தில் மேல்முறையீடு செய்ய முடியாதவர்கள்  கோட்டாட்சியரிடம் நேரடியாக மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.