நடன கலைஞரான எனக்கு பாஜகவில் இருக்க தகுதி இல்லை என்கிறார்கள். அப்படி என்றால் இசைஞானியும் பாஜகவில் இருந்து வெளியேற்றங்கள் என்று முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். இது குறித்து ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சனாதான தர்மம் என்ற பெயரில் தீமை செய்யும் வரை என்னை பயன்படுத்தினார்கள். இப்போது தீய சக்தி ரவுடிகள் பாஜகவை கையாளுகின்றனர். அவர்களே பாஜக தகுதியை முடிப்பார்கள் என்று விமர்சித்துள்ளார். மேலும் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகியது குறிப்பிடத்தக்கது.