இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கிருஷ்ண முகர்ஜி. இவர் தற்போது தயாரிப்பாளர் மீது அதிர்ச்சி புகாரை கூறியுள்ளார். அவர் தயாரிப்பாளர் ஒருவர் தன்னை மேக்கப் அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.
அதாவது சுப் ஷகுன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் நடித்த போது தயாரிப்பாளர் குந்தன் சிங் பல தடவை தனக்கு தொல்லை கொடுத்ததாகவும் ஆடை மாற்றும்போது மேக்கப் அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
அதோடு அந்த நிகழ்ச்சியில் நடித்ததற்காக 5 மாதங்கள் தனக்கு சம்பளம் தரவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த விஷயத்தை சொல்ல எனக்கு இவ்வளவு நாட்கள் தைரியம் வரவில்லை. நான் பாதுகாப்பு இல்லாத நிலையில் நொறுங்கிப் போனேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
View this post on Instagram