பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி. இவர் தமிழில் ஆடுகளம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதோடு தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை டாப்ஸி சமீபத்தில் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிட்டன் வீரர் மதியஸ் போவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை டாப்ஸி வாழ்க்கையில் தான் முன்னேறி வந்தது தொடர்பாக சமீபத்தில் இது குறித்து அவர் கூறியதாவது, நான் இந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறி எதற்கு காரணம் அதிர்ஷ்டம் மட்டும் கிடையாது. நான் அதற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளேன். இப்போது நான் இருக்கும் இடத்தை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு தற்போது சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு நல்ல கதைகள் வந்தால் மட்டும் தான் சினிமாவில் நடிப்பேன் என்று நடிகை டாப்ஸி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.