பிரபல போஜ்புரி பட நடிகை அமிர்தா பாண்டே. இவர் ஹிந்தி சினிமாவிலும் நடித்து வந்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் மும்பையில் வசித்து வந்த நிலையில் அமிர்தா தன்னுடைய சகோதரி வீணா பாண்டே திருமணத்திற்கு கணவருடன் சென்றுள்ளார். திருமணம் முடிந்து  சில காலம் அவர்கள் அங்கேயே தங்கி இருந்த நிலையில் தன்னுடைய சினிமா கேரியர் குறித்து அமிர்தா மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அமிர்தா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த அமிர்தாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இருந்து விட்டதாக கூறிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த விசாரணையின் போது அம்ரிதா தன்னுடைய வாட்ஸ் அப்பில் கடைசியாக வைத்த ஸ்டேட்டஸ் குறித்து தெரியவந்துள்ளது. அதில் இரண்டு படங்களில் வாழ்க்கை இருக்கிறது. அப்படி ஏன் சவாரி செய்ய வேண்டும். அதனால் படகை மூழ்கடித்து என்னுடைய வாழ்க்கையை எதிர்நோக்கிக் கொண்டேன் என்று இருந்துள்ளது. மேலும் அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.