தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை குறைந்து வருவதன் காரணமாக நாளை வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் காரணமாக இன்று ஏழு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி புயல் நகர்ந்து சென்றதைத் தொடர்ந்து மழைக்குறையும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.