பச்சிளம் குழந்தைக்கு உணவு இல்லை என்று X தளத்தில் உதவி கேட்ட பெண்மணிக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உதவிக்கரம் நீட்டியுள்ளார். சென்னையில் நேற்று இரவு 11 மணி முதல் அதி தீவிர கனமழை பெய்து வருவதால், சாலைகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சென்னை மாநகரின் குடியிருப்பு பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மழை காரணமாகப் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக்கூட முடியாமல் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பச்சிளம் குழந்தைக்கு உணவு இல்லை பெண் ஒருவர் X தளத்தில் பதிவிட்டார். இதனைப் பார்த்த அமைச்சர் டிஆர்பி ராஜா நேரடியாகச் சென்று அப்பெண்ணிக்கு உதவியுள்ளார்.