டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துவந்தது. இந்நிலையில் டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 100% ஒழுங்குபடுத்த கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும் கூறினார்.

மதுபானங்கள் மீது அளிக்கப்படும்  புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கோவில்கள், கல்வி நிலையங்கள் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் விரைவில் மூடப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.