தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்று அனைத்து கல்லூரிகளுக்கும் தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் தனி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.