தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் முதன்மை இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து கௌரவிக்க உள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் விஜயின் மக்கள் இயக்கம், வருகின்ற ஜூன் 17ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் 2023 ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.