இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி தற்போது முழுமையான வெற்றி வெறியுடன் களமிறங்கியுள்ளது. கொழும்பு நான்-டெஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி த்ரில்லிங் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஆனாலும், இந்த வெற்றிக்குப் பிறகு சற்றும் ஓய்வெடுக்காமல், அணியின் மேலாண்மை உடனடியாக அடுத்தகட்ட தீவிரப் பயிற்சியில் இறங்கியுள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. போட்டி முடிந்த அடுத்த நாளே வீரர்கள் மீண்டும் மைதானத்தில் இறங்கி வியர்வை சிந்திய நிலையில், அந்தப் பயிற்சி அமர்வில் நடந்த அதிரடி நிகழ்வுகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதமாகியுள்ளன.
தொடரின் போது வீரர்களின் ஒர்க்லோட் எனப்படும் பணிச்சுமையை முழுமையாகக் கருத்தில் கொண்ட அணி நிர்வாகம், முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு வழங்கியுள்ளது. அதன்படி, நட்சத்திரப் பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் ப்ரார் ஆகியோருக்கு இந்தப் பயிற்சி அமர்வில் இருந்து முழுமையான பிரேக் கொடுக்கப்பட்டது.
ஆனால், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி மட்டும் அணியில் ஒரேயொரு வேகப்பந்து வீச்சாளராகக் களத்தில் இருக்கிறார். ஆகிப் நபிக்கு மிகக் குறைந்த ஓவர்களே வீச வாய்ப்பு கிடைத்தது. முதல் இன்னிங்சில் ஓவரே வீசாத அவர், இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 5 ஓவர்கள் மட்டுமே வீசி விக்கெட் ஏதுமின்றி இருந்திருந்தார்.
இதனால், தனது சரியான பந்துவீச்சுத் திறனை மீண்டும் பெறும் நோக்கில், நெட்சில் தீவிரமாகப் பந்துவீச்சுப் பயிற்சி மேற்கொள்ளுமாறு அணி நிர்வாகம் அவருக்குக் கட்டளையிட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், காயத்தால் இந்தத் தொடரிலிருந்து விலகிய ஜஸ்பிரித பும்ராவுக்குப் பதிலாகத்தான் ஆகிப் நபி இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே பயிற்சி அமர்வில், காயமடைந்த சாய் சுதர்சனுக்குப் பதிலாக மாற்று வீரராக அணியில் இணைந்த இளம் அதிரடி பேட்டர் சர்ஃபராஸ் கானும் தீவிர நெட் பயிற்சியில் ஈடுபட்டார். இலங்கை மண்ணின் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் வகையில், இலங்கை வந்திறங்கிய உடனேயே சர்ஃபராஸ் தனது பயிற்சியைத் தொடங்கிவிட்டார். அணியின் பேட்டிங் வரிசைக்கு இவர் கூடுதல் பலம் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பிளேயிங் லெவனில் இவருக்கு இடம் கிடைப்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது என்ற விவாதமும் எழுந்துள்ளது.
