நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஹரியானா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாகவும், மத்திய பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகவும், உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆறு முதல் ஏழு கட்டங்களாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.