தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. நாடு நல்லா இருக்க தலைவர் நன்றாக இருக்க வேண்டும், 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும், பாஜகவின் வெற்றி தமிழகத்திலும் வரவேண்டும், அண்ணாமலை பாஜக கண்டெடுத்த சிப்பிக்குள் முத்து என கன்னியாகுமரியில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் ராதிகா சரத்குமார் பேசியுள்ளார்.

மேலும் வேல் யாத்திரை நடத்தி தமிழகத்தில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தது போல என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என மத்திய  இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.