தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில் விடுமுறை குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.